Friday, January 25, 2013

"கைகொடுப்போம் வாருங்கள்."


கனவும், கற்பனையும்
கொட்டிக் கிடக்கிறது
நிஜங்கள் இன்று
எதிலுமே இல்லை.

மெய்யும், பொய்யும்
கலந்தே உலகை ஆழ்கிறது.
உண்மையை உணர்த்த
கைகொடுப்போம் வாருங்கள்.

பிரிவினை பூமியில் படர்ந்து விட்டது
மொழியால், ஜாதியால், நிறத்தால்..
பூமிக்கு புரிய வைத்து ஒற்றுமையை
ஊக்குவிக்க கை கொடுப்போம் வாருங்கள்.

"அமைதியாய் வாழ்பவனை
அடக்க நினைக்கிறான்"
அகராதியை விட்டே அடிமையை துரத்த
கை கொடுப்போம் வாருங்கள்.

வாழ்க்கைக்கு வழி காட்டிய
பெற்றோர்கள் இன்று
அன்றாட உணவுக்காய்
வீதிகளில்..

அவர்களின் பசி போக்கி
அன்பால் அரவணைக்க
கை கொடுப்போம் வாருங்கள்.

யுத்த அரக்கனால் உறவிழந்து
பாசத்துக்காய் பரிதவிக்கும்
குழந்தைகள் ஆயிரம்..

அவர்களின்
கண்ணீர் துடைத்து
பாசத்தை பரிசளிக்க
கை கொடுப்போம் வாருங்கள்.

நல்லதைத் தூண்ட..
தீயதைத் துண்டாக்க..
கை கொடுப்போம் வாருங்கள்.

மனிதத்தை வளர்க்க..
மனிதனாய் வாழ..
கை கொடுப்போம் வாருங்கள்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment