Wednesday, January 04, 2012

தை பிறந்தால் வழி பிறக்கும்?

(சூரியன் fm இன் ரீங்கார நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட தலைப்பில் எழுதப்பட்ட கவிதை இது. இவ்வருடத்தின் முதல் பதிவு என்பதால் இந்த கவிதை உங்கள் இவ் வருட சிந்தனைக்காகவும்..)


வலிகள், வதைகள்,
கொடுமைகள், கொடூரங்கள்...
இவர்களின் வாழ்வாகிப் போனது.

விலை மதிப்பற்ற செல்வம் கல்விக்காய்..
புத்தக மூட்டை சுமக்க வேண்டிய வயதில்,
அன்றாட பசி போக்க சில சில்லறை காசுகளுக்காய்..
சுமை மூட்டைகள் இவர்களின் முதுகில்.

வறுமையையும், பசியையும்
வாங்கிக் கொண்டு
இவர்கள் இழந்தது ஏராளம்.

கனவுகள் இல்லை,
கல்வியில்லை,
கருணையில்லை,
உடையில்லை,
உறவில்லை,
உறைவிடம் இல்லை.

தொடரும் இழப்புக்களுக்கு
நேரமின்மையால்
முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

மனக் கொதிப்பால் என்
கண்கள் கண்ணீரை கக்கிவிட
கவி வடிக்கிறேன் இவர்கள் விடிவுக்காய்.

மனிதனின் மனச் சட்டங்கள்
முடங்கிக் கிடக்கும் போது..
ஐ.நா சட்டமோ,
அரசாங்க சட்டமோ,
காப்பாற்ற போவதில்லை இவர்களை.

தெருக்களில்,
வேலைத்தளங்களில்
பிஞ்சுகள் பிழியப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நம் கண்களும், மனமும்
உறங்கி கொண்டதே தவிர
இன்னும் விழிக்கவில்லை.

"குழந்தைத் தொழிலாளிகள்."
தமிழில் மட்டும் அல்ல,
உலக மொழிகள் அனைத்திலும்
தவிர்க்கப் பட வேண்டிய வார்த்தை.

இச் சமூகக் கொடுமையை
தடுக்க இவ்வாண்டிலே
வழி சமைப்போம்.
நமக்கு நாம் வினா தொடுத்து
நம் மனச் சாட்சிகளை
விழிக்க வைப்போம்.

வரும் தைப் பிறப்பில்
இவர்களின் வலி நீங்கி
வாழ வழி பிறக்கட்டும்.
குழந்தையின்
சிரிப்பொலி கேட்டு
பூமி சுற்றட்டும்.

எல்லோரும் நம்புவது போல்
நானும் நம்புகிறேன்.
"தை பிறந்தால் வழி பிறக்கும்?"


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments:

  1. hey really nice... thai piranthal vazhi pirakum..:) naanum nambugiren

    ReplyDelete
  2. நன்றி கலைவாணி

    ReplyDelete