Friday, December 17, 2010

ஒரு இதயத்தின் இருதி குமுறல்......

அம்மா...........!!!!!!!!!!!!!!!!!!!!!!!

என் அதிசயமே..........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
என் ஆசானே..........
என் இதயமே..........
என் உயிரே..........

உனக்காக நான் எழுதும் ஒரு முடிவின் முற்றுறை, நீ வாழ வேண்டும் பல்லாண்டு..............

அம்மா........,
நீ தந்த நினைவுகளை மறக்கவில்லை நான்,
என் இனிய பருவமாம் இளம் பருவத்தை தவிர,
நீ தந்த முத்தம் எனக்கு நினைவில்லை,
நீ என்னை கட்டித் தழுவியதும் நினைவில்லை,
ஆனால் நினைவிருக்கறது நீ எனக்காக தந்த உன் பாசம்.

அம்மா..........,
எனக்குள் உன்னை விதைத்தாய்,
ஆனால் இன்று நான் ஒரு தனி மரம்,
இன்று என்னில் நீயில்லை,
ஆனால் நினைவாய் இருக்கிறாய்,
என் இதய கூட்டுக்குள் பத்திரமாய்,
என்றும் இருப்பாய்...

அம்மா.........,
நான் உனக்காக வரையும் இந்த கடைசிக்கண்ணீர் மடல்,
உன் கை வந்து சேரும் முன்,
என் உயிர் பிரிந்திருக்கும் என் உடலை விட்டு,
என் உடல் சேர்ந்திருக்கும் என் தாய் மண்ணோடு,
மன்னித்து விடு என்னை, மறைத்தற்காய் அல்ல, தாமதித்ததுக்காய்

அம்மா.........,
உன்னோடு நான் பிரியாமல் வாழ்ந்த 15 வருடங்கள்
என் வாழ் நாளில் நான் கண்ட
சுவர்கங்கள்..........

அம்மா.........,
நான் உன்னை சிரிக்கவைத்தது,
நீ என்னை ரசிக்க வைத்தது
நான் உன்னை வெறுப்பேற்றியது,
நீ என்னை திட்டியது
எல்லாம் ஒரு இரவின் கண்ணீரோடு கரைந்து விடுகிறதம்மா..........
அன்று நீ எனக்கு அடித்தது இன்று இனிக்கிறது,
ஆனால், உன் நினைவு என் இதயத்தில் காயங்களாகி வலிக்குதம்மா..........

அம்மா...................,
நீ எனக்கு செய்தது ஏராளம், இருந்தும் இன்னொன்றும் செய்து விடு,
இறைவனிடம் மன்றாடு என் மண்ணரை வாழ்கை அமைதி பெற......

அம்மா..............,
நீ இக்கடிதம் கண்டவுடன் நீ அழும் சத்தம் இங்கு
என் காதினில் இடியாய் இடிக்கிறது......
நீ அழக்கூடாது, இது என் அன்புக்கட்டளை,
உனக்கு நான் இடும் கடைசி கட்டளை......

அம்மா............
எனக்கு பயமாய் இருக்கிறது இன்று, மரணத்தை நினைத்து அல்ல
நான் இல்லாத உன்னை நினைத்து.
எனக்கு முதலில் பயம் ஏற்பட காரணமும் நீதான்
உனை தாக்கிய மின்னலில் தான் முதலில் அதிர்ந்தேன் நான்,
இன்றும் எனக்கு பயம் தான் மின்னல் என்றால்.

அம்மா...............,
இன்னும் எவ்வளவோ எழுத வேண்டும் உனக்கு ஆனால்,
நேரம் இடமளிக்கவில்லை.
உலகம் விடை கொடுக்கிறது எனக்கு, நான் இவ்வுலகில்
வாழத்தகுதியில்லையென்று.

அம்மா............,
என் மரணப் படுக்கையிலும் உன் நினைவு மட்டும் தான்,
எனக்கு யாருமில்லை உனை தவிர
சொல்லி விடு என் ஸலாத்தை நம் சொந்தங்களிடம், பந்தங்களிடம் மற்றும்
எனை தேடி வரும் என் நண்பர்களிடமும்.....

அழாதே அம்மா........,
நான் அன்று பிறந்தவுடன் நீ பூத்த புன்னகை, இன்று மறையக்கூடாது உன்னில்
நான் உனை விட்டு பிரிந்தவுடன்.....
இது என் கடைசி ஆசை கூட
எனக்கு நீ விடையளிக்க வேண்டும் கண்ணீரோடு அல்ல,
புன்னகையோடு
இப்படிக்கு
உன் பாசமகன்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment