Tuesday, December 14, 2010

என் இனியவளே!!!



என் இனியவளே,
என் இதயத்தின் இருப்பிடமே,
கற்பனைக் கவிகொண்டு
கரைகிறேன் உன்னுல்...

என் சிந்தனையின் சிநேகிதி நீதான்,
என் எழுத்துக்களின் இருப்பிடம் நீதான்,
காவியங்கள் பாடும் ஓவியம் நீதான்,
காகிதத்தில் தீட்டிய கவியும் நீதான்...

இளம் பூக்களின் மென்மை உன் தேகம்,
பசும் பாலின் நிறம் உன் வண்ணம்,
ஒளி புகா ஒரு இருட்டுக் கல்லரை உன் கூந்தல்,
நான் தடுக்கி விழுந்த கற்கள் உன் கண்கள்...

யார் இவள்????? - எனக்காய்,
நிலவின் உருவாய்,
பூமிக்கு வந்த மகள்...

சிக்கனச் சிற்பி,
சிறப்பாய் செதுக்கிய,
சிறந்த சிற்பம் இவள்...

கற்பனையில் மனைவியாய்,
கனவுகளில் நாயகியாய்,
தற் காலத்தில் காதலியாய்,
கரைந்து விட்டால் என் உயிருக்குள்....

கற்பனையும் கனவும் நிஜமாகும் காலம்,
இசையோடு உறவாடும் கவி போல..
இரு இதயம் இனிதாய் இணையும்...
இனி வரும் காவியம் நம்மை பாடும்.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment