Monday, November 19, 2012

"என் கரமே உன்னைக் கொல்லும்"


மரணப் பீதி காற்றோடு
மனித தசைகள் அம் மண்ணோடு
என் கரமும் கவியின் வரியோடு
இரத்தம் வடிக்கிறது என் கண்ணோடு

நோபல் பரிசுகள் எங்கே?
மனித உரிமை குழுக்கள் எங்கே?
ஐநா எங்கே? அமெரிக்கா எங்கே?

உலகம் எங்கே? ஊடகம் எங்கே?
சுதந்திரம் எங்கே?
பாலஸ்தீன மக்களின் சுவாசம் எங்கே?

பூமிக்குள் புதைந்த மாதுவின்
கருகிய தேகத்துடன்
கருகிவிட்டது மனிதம்

அவள் கருவுக்கும்
கல்லறை நிலை கண்டு
கரைகிறது என் இதயம்

வெள்ளைச் சிரிப்பில்
என் உள்ளம் வென்ற ரோஜாக்கள்
கரிக் கருப்பாய் காட்சி கொடுப்பதேனோ ?

ஈனப் பிறவியான
இதயக் கனிவற்ற கயவனின்
வஞ்சகம் தானோ....


உன் பால் தேகத்தில்
குண்டு பாய்ச்சியவனுக்கு
உலகம் கேட்க உரத்துச் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

என் மௌன சப்தத்தில்
இடியாய் ஒலிக்கிறது
ஒரு சமூகத்தின் கடைசிக் கதறல்

ஓ சமூகமே!
உன்னை கதரவிட்டவனுக்கும்
கடைசியாய் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"

வெறியாட்டம் ஆடும்
இஸ்ரேலியச் சொறிநாயே
மீண்டும் சொல்கிறேன்
"என் கரமே உன்னைக் கொல்லும்"


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment