Friday, November 12, 2010

என் உயிர் திறப்பேன்....




மடியில் கிடந்த மலரின் கூந்தல் வருடி,
காமக் கண்களால் கடலை உற்று நோக்கி,
கவி பாடிக் கொண்டிருந்தான் கடல் அன்னையை
கபிலன் எனும் மலரின் காதலன்.

"காதல் கொண்டது என்னையா? கடலையா?"
மலரின் இதழ் சற்று விரிந்தது
"உன்னைத்தான்டி என் செல்லம்,
கடல் என்ன கடல்????
உனக்காகவே என் உயிருடன் உடல்"

"கோபத்தால் சிவந்து விட்டதா உன் தேகம்
இதோ உனக்காய் என் கவியின் பாகம்."

கபிலனின் கற்பனை கடல்
சுனாமியாய் மாறியது...

"என்ன சூரியன் செத்து விட்டதா?
இன்னும் விடியவில்லை
ஓ.. உன் கருங் கூந்தல் கொண்டு என் கண்னை மறைத்தாயா?

பகலில் இப்படியொரு பளிச்சிடும் மின்னலா?
ஓ.. சிரித்துச் சென்றது நீயா?

சிவப்பு ரோஜாக்கள் எதுவும் சிவப்பாயில்லையே
ஓ.. உன் செவ்விதழ்களை பார்த்து விட்டேனோ?

இன்று எதுவும் சிக்கனமாயில்லை
உன் சிற்றிடைக்கு முன்னால்...

அருவிகள் வளைவும் அழகாயில்லையே
உன் வளைவுகளை ரசித்த என் கண்களுக்கு

பாலின் வென்மை பறி போயிட்டு போல
ஓ.. உன் பாதங்களுக்கடியில் ஒழிந்து கொண்டதோ...

சுவர்கத்தில் வாழ்கிறேனா? என்று தோன்றுகிறது
என் தேவதை நீ என் அருகில் வாழ்வதால்..."

கபிலனின் கவிகள் அவள் வெட்கத்தை தட்டிவிட விட
"போதும் போதும் உங்கள் புகழ்ச்சி" என்று அவன் வாயடைத்தால்

வாயடைத்த கரங்களுக்கு முத்தம் ஒன்றை
பரிசாய்க் கொடுத்த கபிலன்
கேட்டான் "எங்கே எனக்கான உன் கவி?"

"சுவாசமாய் நீ மாறி என்னுல் சென்றால்
உன்னை வெளியே வர விடாமல் தடுத்து
என் உயிர் திறப்பேன்
எனக்குள் உன்னை பூட்டிக் கொண்டு"
என்று சொல்லி அவனின் மார்பில் முகம்
புதைத்தாள் மலர்

கண்களில் கருகி உதிரும் கண்ணீரோடு
முத்தமிட்டான் அவள் நெற்றியில்

பல கோடி ஆண்டுகள் வாழ்ந்த மகிழ்வில்
அவனின் கரம் பிடித்தால்
கண்களை மூடிக் கொண்டு...

கடல் தேவியின் வாழ்த்தோடு
காதல் என்ற உடலுக்குள்
ஈருயிர் இணைந்தது...


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

No comments:

Post a Comment