Monday, August 02, 2010

' ஐ பேட் ' இற்குப் போட்டியாக மைக்ரோசொப்ட்

Virakesari.

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அப்பிளின் பிரபல ' ஐ பேட் ' ரக கணனிகளுக்குப் போட்டியாக ஒரு கணனியை உருவாக்கி வருவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் எச்பி,லெனோவோ,எசூஸ்,டெல் மற்றும் டொஷிபா போன்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

அத்துடன் தமது மென்பொருள் வல்லுநர்களுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருவதாகவும் கூடிய விரைவில் மக்களின் தேவைக்கேற்ற விதத்தில் இது சந்தைக்கு வருமெனவும் தெரிவித்தார்.

இந்நிலையில் மைக்ரோசொப்ட் கொரியர் எனப்படும் இரட்டைத் திரைகளைக் கொண்ட கணனிகளை அதன் வல்லுநர் குழுவொன்று இரகசியமாக உருவாக்கி வருவதாகவும் தகவல் கசிந்திருந்தது.

ஆனால் இது தாம் உருவாக்கிவரும் பலவகையான கணனிகளில் ஒரு வகை மட்டுமே என மைக்ரோசொப்ட் அண்மையில் தெரிவித்திருந்தது.


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

Post Comment

2 comments: