பிரிட்டிஷ் மற்றும் இந்தியாவிற்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது ஐந்து ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தகத்தை இருமடங்காக உயர்த்துவதற்காக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் டேவிட் கெமரூன் முடிவெடுத்துள்ளனர்.
பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் இந்தியாவிற்கு இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட போது புதுடில்லியில் நேற்று இடம்பெற்ற இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடனான சந்திப்பின் போது மேற்படி முடிவெடுத்துள்ளனர்.
அதேவேளை காலாச்சார ரீதியாக இருநாடுகளும் நெருக்கமாக செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். கல்வி. பாதுகாப்பு, பருவநிலை தொடர்பாகவும் மற்றும் ஆப்கானிஸ்தான் நிலவரம், பயங்கரவாதம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்தனர்.
No comments:
Post a Comment