
virakesari
மட்டக்களப்பு –கல்முனை நெடுஞ்சாலையில் பாரிய போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது. பாதையின் நடுவே பாரிய பாரந்தூக்கும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்துள்ளமையே இதற்குக் காரணம் என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
பாதை அபிவிருத்திப் பணிகளுக்காக காத்தான்குடியில் 39 லட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வரவேற்பு நுழைவாயிலை உடைத்துக் கொண்டிருந்தபோதே மேற்படி இயந்திரம் உடைந்து விழுந்துள்ளது.
இதனால் பாரிய வாகனப் போக்குவரத்துத் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கல்முனை - மட்டக்களப்பு பாதையில் மாற்று வழி பயன்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment