
பாக்கிஸ்தான் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பாக்.அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. 15 வருடங்களின் பின் பாக்.அணி அவுஸ்.அணி எதிராக வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் நாளை இங்கிலாந்து அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள நிலையில் அவ்வணியின் தற்போதய தலைவர் சல்மான் பட் கிரிகின்போ இனையதளத்துக்கு வழங்கியுள்ள செவ்வியில் தமது அணி பந்து வீச்சில் மிகச் சிறந்த பலத்துடன் இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார். மொஹமட் ஆசிப் ஆமிர் உமர் குல் போன்றோர் எமக்கு மிகப் பெரிய பலம் எனத் தெரிவித்த அவர் ஆசிப் மற்றும் ஆமிர் இருவரும் உலகில் சிறந்த பந்து வீச்சாளர்கள் எனவும் தெரிவித்தார்.
இதற்கு முன் முன்னால் அணித் தலைவரும் உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளருமான வஸீம் அக்ரம் ஆமிர் என்னை விடக் கெட்டிக்காரர் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment