
virakesari
சீனாவில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவின் பத்து மாகாணங்களில் இதுவரை 107 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59 பேர் வரை காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
யங்டீஸ் ஆற்றுப்பகுதியை அண்டிய பகுதியில் உள்ளவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தினால் 29 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒன்பது லட்சத்து தொண்ணூற்று ஏழாயிரம் பேர் வரை மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த மழை காரணமாக ஆறுகள் மற்றும் நீர் நிலைகள் நிறைந்துள்ளன எனவும், நேற்று செவ்வாய்க்கிழமை தென் சீனாவில் இடம்பெற்ற மண்சரிவினால் 17 பேர் பலியானதுடன் 44 பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment