
ஒவ்வொரு ஊர் பயணத்தின் போதும்
ஓடி வந்து வரவேற்க நீயில்லை
என் காதலியாய் இன்று
ஆனால் நீ வீட்டை விட்டு வந்தாலும்
உன்னை வரவேற்க நான் இருந்தேன்
உன் வீதியோரத்தில் கால்கடுக்க
உன் காதலனாய் அன்று...
காலங்கள் மாறும் உலகில் நீயும் மாருவாய்
என்று எதிர்பார்க்கவில்லை நான்
கலங்கம் இல்லாமல் சந்தேகம் கொள்ளாமல்
உன்னை காதலித்ததால் தான்
என்னை வரவேற்பதற்குத்தான் என் காதலியாய் வரவில்லை
வழியனுப்ப வந்துவிடு என் ஊர் சனத்தோடு
எனக்காக வெட்டப்பட்டிருக்கும் மண்ணரைக்கு
No comments:
Post a Comment