
இரக்கமில்லாத இரவு
இனிமையான மெல்லிசை
தனிமையில் நான்
என் நினைவில் நீ
நீரில்லாத மீன்கள் போல்
உயிரிழந்து கிடக்கிறேன்
வெயிலில் அகப்பட்ட புழுப்போல
உன் நினைவு சூட்டால் தினம் துடிக்கிறேன்
நான் இன்னும் உயிருடனிருக்கிறேன்
நீ சுவாசிக்கும் காற்றையே நான்
சுவாசிக்கிறேன் என்பதால்
அறியாத வயதில் அப்பாவை பிரிந்த எனக்கு
6 வயதில் அம்மாவை பிரிந்த எனக்கு
விரும்பியே நண்பர்களையும் விட்டுக் கொடுத்த எனக்கு
நான் அறிந்தே நீ பிரிந்தது ஒன்றும் பெரிதில்லை
பிரிவின் வலிகள் பிடித்து விட்டது எனக்கு
என் வலியின் வரிகள் கவியானது உனக்கு
இருந்தும்....
நிலையற்றுக் கிடக்கிறேன் என் ஒவ்வொரு இரவிலும்
நினைவுகளால் நீ என்னைத் திருடுவதால்
இதயம் பொறிக்கப்பட்ட மட்டையை பரிசாய் தந்தவளே
அப்போதே புரிந்திருக்க வேண்டும் உன்
உணர்வற்ற ஊமை நடிப்பு
அறிய வில்லை இந்த முட்டால் காதல் மமதையால்
ஓங்கி அடித்துவிட்டாய் என் இதயத்தில்
பொருந்திக் கொள்கிறேன் அடித்தது நீ என்பதால்
No comments:
Post a Comment